அன்று நீ
தேவதையென அழகாய்த் தெரிந்தாய்
எங்கே போனது அழகத்தனையும்?
நேற்று நீ
வாசல் நிறைந்த கோலம் போலிருந்தாய்
கலை அறியாமல் கலைத்துச் சென்றது யார்?
சற்று முன்
சிந்தை மயக்கும் காவியமாய் மிளிர்ந்தாய்.
ஏனிப்படி சிதைந்து போன சித்திரமானாய்.?
நாளுக்கொரு வேஷம் போடுகிறாய்
மணிக்கொரு வடிவம் ஏந்துகிறாய்
நொடிக்கொரு உருவம் காட்டுகிறாய்
உன்னை அலைக்கழிப்பது யார்?
கோடானு கோடி நட்சத்திரங்களா?
தேய்ந்து வளரும் வெண்ணிலவா?
சுட்டெரிக்கும் சூரியனா
சொல்லுங்களேன்
வெண்பட்டு மேகங்களே