Tuesday, July 14, 2009

ஏன் இந்த மாற்றம்?

என்ன இது இப்படி ஒரு மாற்றம்

அன்று நீ
தேவதையென அழகாய்த் தெரிந்தாய்
எங்கே போனது அழகத்தனையும்?
நேற்று நீ
வாசல் நிறைந்த கோலம் போலிருந்தாய்
கலை அறியாமல் கலைத்துச் சென்றது யார்?
சற்று முன்
சிந்தை மயக்கும் காவியமாய் மிளிர்ந்தாய்.
ஏனிப்படி சிதைந்து போன சித்திரமானாய்.?
நாளுக்கொரு வேஷம் போடுகிறாய்
மணிக்கொரு வடிவம் ஏந்துகிறாய்
நொடிக்கொரு உருவம் காட்டுகிறாய்
உன்னை அலைக்கழிப்பது யார்?
கோடானு கோடி நட்சத்திரங்களா?
தேய்ந்து வளரும் வெண்ணிலவா?
சுட்டெரிக்கும் சூரியனா
சொல்லுங்களேன்
வெண்பட்டு மேகங்களே


Monday, July 13, 2009

டா...ஜ்

வா..ஹ் டாஜ்

டீ குடிக்க வாரீகளா....

தினம் ஒரு சாலட்

தக்காளி
வெங்காயம்
வெள்ளரிக்காய்
கொத்தமல்லி தழை
எலுமிச்சை சாறு
உப்பு

படத்தில் உள்ளது போல் அழகு படுத்தி மேஜையில் வைத்தால்
மட மடவென்று காலியாகும்

கடவுள் ஒரு கலங்கரை விளக்கம்

கடவுள் ஒரு கலங்கரை விளக்கம்

கலங்கி நிற்பவர்களுக்கு இறைவன் ஒரு கலங்கரை விளக்கம்

அவனே மனதில் நிலைக்கட்டும் ,பாதையைக் கண்ணில் காட்டட்டும்.

கண்ணில் வழியும் நீரைக் கடலில் சென்று சேர்க்கட்டும்

தொண்டையில் நிற்கும் துக்கத்தைத் தொலைவில் வீசி எறியட்டும்